/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல் குடிநீர் 3 நாட்களுக்கு 'கட்'
/
ஒகேனக்கல் குடிநீர் 3 நாட்களுக்கு 'கட்'
ADDED : ஜன 12, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரும், 21- முதல், 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 டவுன் பஞ்.,கள் மற்றும் 10 ஒன்றியங்களுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் பாலக்கோடு கோட்டத்தில் வரும், 21-ல், மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுசமயம், பாலக்கோடு அருகில் அமைந்துள்ள பிரதான, 1,500 எம்.எம். டி.ஐ.ஏ., அளவிலான இரும்பு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை சரிசெய்யும் பணி, குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து வரும், 21 முதல், 23- வரை, 3 நாட்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே, இம்மூன்று நாட்களுக்கும் மற்ற நீர் ஆதாரங்களை பயன்படுத்தி, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.