sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்ஓசூரில் 32 சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

/

குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்ஓசூரில் 32 சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்ஓசூரில் 32 சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும்ஓசூரில் 32 சங்கங்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 20, 2025 01:39 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:குப்பை வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, ஓசூரில், 32 சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் கடந்த, 2017 ல், அ.தி.மு.க., ஆட்சியில் வீடுகளுக்கு மாதம், 30 ரூபாயும், மற்ற கட்டங்களுக்கு, 300 ரூபாயும் குப்பை வரி விதிக்கப்பட்டு, 7 ஆண்டுக்கும் மேலாக வரி வசூல் செய்யாததால், 118 கோடி ரூபாய் வரை பாக்கி உள்ளது. இதனால், மாநகராட்சி நிர்வாகம் குப்பை வரியை நிலுவையுடன் வசூல் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 'சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சொத்து வரி பாக்கியை செலுத்தினால் கூட, குப்பை வரி பாக்கிக்கு தான், முதலில் பணம் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு டிச.,ல் பாதாள சாக்கடை திட்டத்தை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 2017 முதல், 2022 மார்ச் வரை, 5 ஆண்டு காலத்திற்கு குப்பை வரியை தள்ளுபடி செய்ய, முதல்வரிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், 2022 ஏப்., 1 முதல் கணக்கிட்டு குப்பை வரி வசூல் செய்யப்படும் என கூறினார்.

அமைச்சர் கூறியது போல், 5 ஆண்டுகளுக்கு குப்பை வரியை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி, ஓசூர் ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஓசூர் வணிகர் சங்கம், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய மருத்துவ சங்கம், ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், ஓசூர் எமினென்ட் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், ஹோஸ்டியா, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம், ஓசூர் மண்டல மருந்து வணிகர்கள் சங்கம், ஓசூர் அச்சக உரிமையாளர்கள் சங்கம், பட்டாசு வணிகர் சங்கம், ஓசூர் ஆட்டோ மொபைல் டீலர்ஸ் அசோசியேஷன், ஓசூர் எப்.எம்.சி.ஜி., வினியோகஸ்தர்கள் சங்கம், துணிக்கடை வியாபாரிகள் சங்கம், ஜூவல்லரி உரிமையாளர்கள் சங்கம், சூப்பர் மார்க்கெட் வியாபாரிகள், பலசரக்கு வியாபாரிகள் சங்கம், ஓசூர் உணவக உரிமையாளர் சங்கம், ஓசூர் லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கம், கல்யாண மண்டபம் உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் அசோசியேஷன், ஸ்கிராப் டீலர்ஸ் அசோசியேஷன், மட்டன் கடை உரிமையாளர் சங்கம், கிரடாய் சங்கம், போட்டோ உரிமையாளர் சங்கம், புட்வேர் உரிமையாளர் சங்கம், ஸ்டீல் அண்ட் மெட்டல் மார்ட் உரிமையாளர் சங்கம், நகை அடமான கடை உரிமையாளர் சங்கம், அக்ரோ உரிமையாளர்கள் சங்கம், பேட்டரி கடை உரிமையாளர்கள் சங்கம், டி.என்.டி., மக்கள் முன்னேற்ற கழகம், ஓசூர் டூவீலர் மெக்கானிக் பாதுகாப்போர் சங்கம் என, 32 சங்கங்கள் சேர்ந்து, 'நம்ம ஓசூர்' என்ற பெயரில், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வணிகர் சங்க நிர்வாகிகள் தாமஸ், சரவணன், ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் சீனிவாசலு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us