sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

/

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'

'மனதளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்துமே 'ராக்கிங்' தான்'


ADDED : ஜூலை 03, 2024 07:51 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று மாலை, கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்-குழு சார்பில், 'ராக்கிங்' தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்த-ரங்கம் நடந்தது. கல்லுாரி பேராசிரியை வள்ளிசித்ரா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., தமிழரசி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய்பிரியா பேசியதா-வது: மகளிர் தற்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். முந்தைய பெண் சந்ததிகள் உங்கள் அளவிற்கு கல்வி பயின்றவர்களாக இல்லை. தற்போது கல்வியின் முக்கியத்-துவம் வளர்ந்துள்ளது. உங்களை படிப்பதற்கு மட்டுமல்ல, அதையும் தாண்டி, உங்கள் வாழ்வில் பல்வேறு அனுபவங்களை பெற அனுப்பி உள்ளனர். கல்லுாரியில் முதலாமாண்டு படிக்க வரும் மாணவியரை மற்ற மாணவியர் அன்போடு அரவணைக்க வேண்டும்.

'ராக்கிங்' என்பது ஒருவரை துன்புறுத்துவது மட்டுமல்ல. மனத-ளவில் பயம், அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் அனைத்-துமே, 'ராக்கிங்' வகையில் சேரும். அதை உணர வேண்டும். புதிய மாணவிரை நீங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கவில்லை என்-றாலும், அச்சப்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அது போன்ற நிகழ்வுகள் நடந்தால், மாவட்ட சட்டப்பணிகள் குழு-வுக்கோ, கல்லுாரி நிர்வாகத்திற்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர், பேராசிரியைகள், மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us