/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
/
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ஆன்மிக புத்தகம் விற்க ஸ்டால் மலைக்கோவிலில் ஏற்பாடு
ADDED : ஜூலை 03, 2024 07:52 AM
ஓசூர் : ஓசூர் மலை மீது, மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு, ஓசூர் சுற்றுப்புற பகுதி மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் ராமாயணம், மஹா-பாரதம் மற்றும் தமிழகத்தில் உள்ள கோவில்களின் தல வரலாறு உட்பட பல்வேறு விதமான ஆன்மிக புத்தகங்களை விற்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் ஒரு வாரத்திற்குள் ஸ்டால் அமைத்து, புத்தகங்களை விற்க அறிவுறுத்தியுள்ளது. அதனால், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், ஸ்டால் அமைப்பதற்-கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோல், கிருஷ்-ணகிரி கன்னம்பள்ளி வெங்கட்ரமண சுவாமி கோவில், காட்டுநா-யனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய கோவிலிலும் ஸ்டால்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.