sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநகராட்சியில் வளர்ச்சி பணி செய்த நிறுவனங்களுக்கு பாராட்டு விழா

/

மாநகராட்சியில் வளர்ச்சி பணி செய்த நிறுவனங்களுக்கு பாராட்டு விழா

மாநகராட்சியில் வளர்ச்சி பணி செய்த நிறுவனங்களுக்கு பாராட்டு விழா

மாநகராட்சியில் வளர்ச்சி பணி செய்த நிறுவனங்களுக்கு பாராட்டு விழா


ADDED : ஆக 25, 2024 01:02 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஆக. 25-

ஓசூர் மாநகராட்சி பகுதியில், சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்த தனியார் நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் பாராட்டு விழா நடந்தது. மாநகர மேயர் சத்யா தலைமை வகித்தார். துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேயர் சத்யா பேசுகையில், ''டைட்டன் நிறுவனம், 4.50 கோடி ரூபாயில் ஏரிகளை துார்வாரி உள்ளது. ஆனந்த் நகரில், 10,000 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறது. நெரோலக் பெயின்ட் நிறுவனம், பாலங்களுக்கு வண்ணம் தீட்டி கொடுத்துள்ளது. டி.வி.எஸ்., நிறுவனம் பல பள்ளிகளுக்கு வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது. பெடரல் வங்கி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அமரும் வகையில் இருக்கைகளை வழங்கியுள்ளது. ரோட்டரி சங்கம் கொரோனா காலக்கட்டத்தில், அரசு மருத்துவமனைக்கு படுக்கை வசதிகள், ரத்தம் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளது. குறைந்த அளவிலான நிறுவனங்கள் தான், சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்கியுள்ளன. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு டெஸ்க், பெஞ்ச் வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தனியார் நிறுவனங்களுக்கு மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். உதவி கமிஷனர் டிட்டோ, மாநகர நல அலுவலர் பிரபாகரன், வக்கீல் சங்க தலைவர் ஆனந்தகுமார், ஓசூர் மக்கள் சங்க முன்னாள் தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us