/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : மார் 12, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடத்துார்: கடத்துார் அடுத்த உனிசேனஹள்ளி வருவாய் கிராமத்தில் தேக்-கல நாயக்கன்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வழி பாதை பகுதியில், 20க்கும் மேற்பட்டோர் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
புகாரை அடுத்து, வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 4 ஏக்கர் பரப்பளவில் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் வள்ளி தலைமையில் கடத்துார் ஆர்.ஐ., முருகன் உள்-ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆக்கிரமிப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது.