sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு

/

1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு

1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு

1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு


ADDED : பிப் 27, 2025 02:00 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1,100 மீட்டர் உயர மலையில் ஏறிபக்தர்கள் மஹா சிவராத்திரி வழிபாடு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டி, கடல் மட்டத்தில் இருந்து, 1,100 மீட்டர் உயர மலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. மலை மீது ஏற சிறிது துாரம் மட்டுமே படிக்கட்டுகள் உள்ளன. அதன் பின் செங்குத்தாக உள்ள பாறையின் மீது, இரும்பு குழாய்களை பிடித்து தான் பக்தர்கள் ஏற வேண்டும். நேற்று மஹா சிவராத்திரியையொட்டி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி சுற்றுப்புற கிராமத்தினர் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். கொளுத்தும் வெயிலிலும், காலில் செருப்பு அணியாமல் மலை மீதேறி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சென்று வர சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

அதேபோல், ஓசூர் மலைமீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரியையொட்டி, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், சப்கலெக்டர் பிரியங்கா, எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். 3 மாநிலத்தில் இருந்து வந்த பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தன. ஓசூர் ராம்நகரிலுள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில், மஹா

சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.






      Dinamalar
      Follow us