/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரை குறி வைத்துள்ள கொள்ளை கும்பல் அடுத்தடுத்து அரங்கேறும் ஏ.டி.எம்.,உடைப்பு
/
ஓசூரை குறி வைத்துள்ள கொள்ளை கும்பல் அடுத்தடுத்து அரங்கேறும் ஏ.டி.எம்.,உடைப்பு
ஓசூரை குறி வைத்துள்ள கொள்ளை கும்பல் அடுத்தடுத்து அரங்கேறும் ஏ.டி.எம்.,உடைப்பு
ஓசூரை குறி வைத்துள்ள கொள்ளை கும்பல் அடுத்தடுத்து அரங்கேறும் ஏ.டி.எம்.,உடைப்பு
ADDED : ஜூலை 28, 2024 04:27 AM
ஓசூர்: ஓசூரை குறி வைத்துள்ள கொள்ளை கும்பல், அடுத்தடுத்து ஏ.டி.எம்., மையங்களை உடைத்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த, குந்தாரப்பள்ளி ராமாபுரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குள் கடந்த, 2015 ஜன., 24ல் புகுந்த வட மாநில கும்பல், அன்றைய மதிப்பில்,
12 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,000 பவுன் தங்க நகையை
கொள்ளையடித்து சென்றது. 2021 ஜன., 20ல், ஓசூர் முத்துார் பைனான்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த வட மாநில கும்பல், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்தது. குருபரப்-பள்ளியில் கடந்த ஏப்., மாதம் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை, காஸ் வெல்டிங் மூலம் உடைத்த வட மாநில கும்பல், 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது.
ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை கடந்த, 5ல், மர்ம கும்பல் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. கடந்த, 6 அதி-காலை, 3:00 மணிக்கு ஓசூரில் பாகலுார் சாலையில் என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியில் உள்ள ஐ.டி.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து, 14.50 லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் கொள்ளையடித்தது.
இச்சம்பவம் அடங்குவதற்குள் கடந்த, 21 இரவு ஜூஜூவாடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின், ஓசூர் சிப்காட் கிளையின் ஷட்-டரை உடைத்து, மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. மேலும் அதன் அருகே உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தையும் மர்ம கும்பல் உடைத்துள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முடிய-வில்லை. அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மீது கருப்பு ஸ்பிரேயை மர்ம கும்பல் அடித்துள்ளது. கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா டிவி-ஆரை மர்ம கும்பல் எடுத்து சென்றது. அதனால், எத்தனை பேர் கொள்ளையடிக்க வந்தனர் என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
ஓசூர் பகுதியை குறிவைத்து, வடமாநில கும்பல் கொள்ளை சம்ப-வங்களை அரங்கேற்றி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, கொள்ளை கும்பல் ஓசூர் அல்லது பெங்களூருவில் முகா-மிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாரால் குற்-றவாளிகளை நெருங்க முடியவில்லை. இது மக்களை அதிர்ச்சிய-டைய செய்துள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

