sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

/

தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு

தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு


ADDED : மே 30, 2024 09:42 PM

Google News

ADDED : மே 30, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி, அகலக்கோட்டை, கண்டகானப்பள்ளி, மேடுமுத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில், மூன்று யானைகள் இரவில் சுற்றித்திரிந்து அப்பகுதி விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன.

நேற்று முன்தினம் இரவு, மூன்று யானைகளும் தேன்கனிக்கோட்டை அருகே சாவரபத்ரம் செல்லும் சாலையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதிக்கு சென்றன. அப்போது அங்கிருந்த ஒரு பள்ளத்தில் இறங்கிய போது, அப்பகுதியில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது ஒரு யானை உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து அந்த யானை பலியானது. தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் உயிரிழந்தது, 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என, தெரிந்தது.

கடந்த மாதம் தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளியில் தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி ஒரு யானை பலியானது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us