/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
/
அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலம்
ADDED : ஆக 08, 2024 05:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி, 171வது ஆண்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு, அவதானப்பட்டி, நெக்குந்தி, சின்னமுத்துார், பெரியமுத்துார், அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
நெக்குந்தியிலிருந்து முத்துமாரியம்மன் மற்றும் கரகமும், அவதா-னப்பட்டியில் இருந்து பூங்காவனத்தம்மன், மாரியம்மன், காளி-யம்மன், நாகதேவி மற்றும் பொன்கரகமும் இணைந்து, அவதா-னப்பட்டி மேம்பாலம் அருகில் தலை கூடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 20 அடி நீள அலகு குத்திக் கொண்டும், காளி மற்றும் அம்மன் வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் வேண்-டுதலை நிறைவேற்றினர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்-தர்கள் பங்கேற்றனர். பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று அம்மனுக்கு படைத்தனர்.
கோவில் பின்புறம், 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலி-யிட்டு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவை-யொட்டி ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.