sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் சிறுவன் பலி; காப்பாற்ற முயன்ற மாமா நினைவு இழப்பு

/

ஏரியில் சிறுவன் பலி; காப்பாற்ற முயன்ற மாமா நினைவு இழப்பு

ஏரியில் சிறுவன் பலி; காப்பாற்ற முயன்ற மாமா நினைவு இழப்பு

ஏரியில் சிறுவன் பலி; காப்பாற்ற முயன்ற மாமா நினைவு இழப்பு


ADDED : ஏப் 30, 2024 08:26 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் கடவுள் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 40, இவரது மகன் மதுபாலா, 8. அப்பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மதியம் 3:00 மணிக்கு, நாகராஜ் தன் தங்கை கணவரான காடுலக்கசந்திரத்தை சேர்ந்த திம்மராஜ், 33, மற்றும் தன் மகன் மதுபாலா ஆகியோரை அழைத்து கொண்டு, காரப்பள்ளியிலுள்ள ஏரிக்கு சென்றார்.

சிறிது நேரம் கழித்து, திம்மராஜ் மற்றும் மகன் மதுபாலா ஆகியோரை ஏரி அருகே இருக்க கூறி விட்டு, காரப்பள்ளிக்கு நாகராஜ் சென்றார். அப்ப‍ோது ஏரியில் இறங்கிய மாணவர் மதுபாலா நீரில் மூழ்கினார்.

இதை கவனித்த திம்மராஜ், ஏரிக்குள் இறங்கி மதுபாலாவை காப்பாற்ற முயன்றபோது அவரும் நீரில் மூழ்க துவங்கினார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மாணவன் மதுபாலா மற்றும் திம்மராஜ் ஆகியோரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு மாணவர் மதுபாலா உயிரிழந்தார். சுயநினைவை இழந்த திம்மராஜ், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us