sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மா பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

/

மா பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

மா பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அறிவுரை

மா பயிர்களை வறட்சியில் இருந்து பாதுகாக்க கலெக்டர் அறிவுரை


ADDED : ஏப் 20, 2024 09:02 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 09:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மா வை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 33,000 எக்டர் பரப்பளவில், 90 சதவீதம் மானாவாரியாகவும், 10 சதவீதம் இறவை பாசனத்திலும் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் நிலவும் வெப்பத்தினால், மா மரங்களில் பூக்கள் பூத்தாலும், காய் பிடிப்பு குறைந்து, 20 சதவீதத்தற்கும் குறைவாகவே காய்ப்பு தன்மை காணப்படுகிறது.

இதை சமாளிக்க, குறைந்த தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தி மா மரங்களை பாதுகாக்கலாம். மானாவரி மா சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களுக்கு அருகில் உள்ள நீர் நிலை ஆதாரங்களை கண்டறிந்து, வாரம் ஒருமுறை மா செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதன் மூலம் வறட்சியிலிருந்து பாதுகாக்கலாம்.

இலைமக்கு மற்றும் தென்னை நார் கழிவுகள் மூலம் மரத்தின் இலைபடர்வின் பகுதியில் நிலப்போர்வை அமைத்து, மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். கோடை காலத்தில் மா மரத்தை சுற்றி அரை வட்டக்குழிகள் எடுத்தல், வயலின் சாய்வு திசைக்கு எதிர் திசையில் கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். இம்முறைகளை பயன்படுத்தி தற்காலிகமாக வறட்சியிலிருந்து மா பயிர்களை பாதுகாக்கலாம்.

இதற்கு நிரந்தர தீர்வு காண, நுண்ணீர் பாசனம் அமைத்து, மழை நீரை சேமித்து, நிலப்போர்வை அமைத்து, சரிவிகித உர மேலாண்மை செய்து, வறட்சியை தாங்கி வளரக்கூடிய வேர் செடிகளை பயன்படுத்தி ஒட்டுக் கட்டுதல், வறட்சியை தாங்கும் புதிய ரகங்களை அறிமுகப்படுத்துதல், நீராவி போக்கு தடுப்பான்களை பயன்படுத்துதல் மூலம் நிரந்தரமாக மா பயிற்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us