sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : மே 25, 2024 02:43 AM

Google News

ADDED : மே 25, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில், ஆர்.சி., தேவாலயம் அருகே, சாலையின் குறுக்கே புதிய ரயில்வே பாலம் அமைக்கும் பணி கடந்த ஆக., மாதம் துவங்கியது. இப்பணி முழுமை பெறாததால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

பாலம் பணியால், ரயில்வே சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்றவை திருப்பி விடப்பட்டுள்ளன. மழை பெய்யும் போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி விடுவதால், வாகன ஓட்டிகள் பல கி.மீ., சுற்றி கொண்டு தேன்கனிக்கோட்டை சாலையை அடைய வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகம் மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.

புதிய பாலம் பணியையும் விரைந்து முடிக்காமல், ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இதை கண்டித்தும், பணிகளை விரைந்து முடிக்கவும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால், உடனடியாக அதிகளவு மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்ற வலியுறுத்தியும், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நீலகண்டன் தலைமையில், நேற்று மாலை ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர்கள் சிவக்குமார், ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us