/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவில் விஷம் கலந்த தொழிலாளி கைது உயிர் தப்பிய மனைவி, 3 குழந்தைகள்
/
உணவில் விஷம் கலந்த தொழிலாளி கைது உயிர் தப்பிய மனைவி, 3 குழந்தைகள்
உணவில் விஷம் கலந்த தொழிலாளி கைது உயிர் தப்பிய மனைவி, 3 குழந்தைகள்
உணவில் விஷம் கலந்த தொழிலாளி கைது உயிர் தப்பிய மனைவி, 3 குழந்தைகள்
ADDED : ஆக 21, 2024 01:25 AM
உணவில் விஷம் கலந்த தொழிலாளி கைதுஉயிர் தப்பிய மனைவி, 3 குழந்தைகள்
ஓசூர்,
தேன்கனிக்கோட்டை அருகே, உணவில் விஷம் கலந்து மனைவி, 3 மகன்களை கொல்ல பார்த்த தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர். விஷம் கலந்த உணவை சாப்பிடாமல் தவிர்த்ததால், மனைவி, 3 மகன்கள் உயிர் தப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பூதட்டிகோட்டையை சேர்ந்தவர் கரியப்பா, 36, கூலித்தொழிலாளி; இவர் மனைவி சாந்தி, 30, டெய்லர்; இவர்களுக்கு, 16, 14 மற்றும் 12 வயதுடைய, 3 மகன்கள் உள்ளனர். குடி பழக்கமுள்ள கரியப்பா கடந்த, 18 ல் மது வாங்க பணம் கேட்டபோது, மனைவி சாந்தி மறுத்ததால், அவர்களுக்குள் தகராறு
ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கரியப்பா, மனைவியை கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதனால் கடந்த, 18 இரவு மகன்களுடன் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, சாந்தி துாங்கினார்.
நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு தன் வீட்டிற்கு சென்ற சாந்தி, குழந்தைகளுக்கு உணவு சமைத்து வைத்து விட்டு வெளியே சென்றார்.
அந்த நேரத்தில் கணவர் கரியப்பா வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து, குழந்தைகளுக்கு உணவு கொடுக்க சாந்தி அழைத்தார். அப்போது உணவிலிருந்து, களைக்கொல்லி மருந்து வாடை வந்துள்ளது. சந்தேகமடைந்த சாந்தி, மகன்களுக்கு உணவு கொடுக்காமல், தானும் உண்ணாமல் தவிர்த்தார். இது குறித்து, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார், களைக்கொல்லி மருந்து கலந்ததாக கூறப்படும் உணவை பறிமுதல் செய்து, அதை தர்மபுரி அரசு மருத்துவமனை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த தொழிலாளி கரியப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

