/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 762 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை
/
ஓசூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 762 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை
ஓசூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 762 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை
ஓசூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 762 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை
ADDED : செப் 01, 2024 04:54 AM
ஓசூர்: ஓசூரில் நடந்த, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 762 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்-பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் ஆகியவை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. 5ம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை படித்தவர்கள் மற்றும் டிகிரி, டிப்-ளமோ, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் என மொத்தம், 4,624 பேர் முகாமில் பங்கேற்றனர். 127 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 762 பேரை பணிக்காக தேர்வு செய்தன. அவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் சரயு உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்-கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கு-களை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர் சரயு பேசியதாவது: கடந்தாண்டு கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில், 4 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2,500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமணமா-னாலும் வீட்டிற்குள்ளேயே இருந்து விடாமல், தங்களுக்கென ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். அப்போ-துதான், தங்களது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க முடியும். ஆரம்பத்தில் குறைவான ஊதியம் இருந்தாலும் அப்ப-ணியில் சேர்ந்து, தங்களது திறமையை வளர்த்து கொண்டால், வாழ்க்கையில் உயர முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், சப் கலெக்டர் பிரியங்கா, மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்-குனர் பெரியசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரி-சங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பால-முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.