sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிப்பு

/

பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிப்பு

பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிப்பு

பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை பக்தர்கள் மீது உரல் வைத்து மஞ்சள் இடிப்பு


ADDED : ஜூலை 30, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஜெகதேவி, பாலமுருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவில் நேற்று, பக்தர்கள் மீது உரல் வைத்து, மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி பாலமுருகன் கோவிலில், 79 ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த, 28ல் கொடியேற்றத்-துடன் துவங்கியது. நேற்று காலை பக்தர்கள் புஷ்ப காவடி, மயில் காவடியுடன், அலகு குத்தி சடல்தேர், கல் உரல், இரும்பு சங்-கிலி, டிராக்டரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 4:30 மணிக்கு பக்தர்கள் முருகன், அருண்குமார், ராமன் ஆகியோர் அங்கு அமைத்திருந்த பரண் மீது படுத்துக்கொள்ள, அவர்களது மார்பின் மீது, குந்தானி வைத்து, 15 கிலோ மஞ்-சளை, 2 பேர் உலக்கையால் இடித்தனர். இடித்த அந்த மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.தொடர்ந்து அதே பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்-தரத்தில் பறந்து சென்று, முருகன் சிலைக்கு மாலை அணி-வித்தும், கற்பூரம் காட்டியும், குழந்தையை சுமந்து சென்றும், நேர்த்திக் கடன் செலுத்தினார்.நிகழ்ச்சியை காண, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருவண்-ணாமலை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநி-லங்களில் இருந்தும், 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்-தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us