sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இறைச்சி கடைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

/

இறைச்சி கடைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

இறைச்சி கடைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி

இறைச்சி கடைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி


ADDED : ஆக 27, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, செக்காம்பட்டிக்கு செல்லும் சாலை மற்றும் வர்ணதீர்த்தத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். அங்குள்ள தெருவில், இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இறைச்சி எடுக்கப்பட்ட நிலையில், மாட்டின் எலும்பு, கொம்புகள், தோல் ஆகியவை திறந்தவெளியி-லேயே கொட்டப்படுகின்றன. இறைச்சி கழிவுகளால், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், இறைச்சிக்காக நாய்கள் சுற்றுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். அதே போல், வர்ணீஸ்வரர் கோவில் எதிரில், செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள் அங்குள்ள ராஜகால்வாயில் கொட்டப்படுவதால், பக்தர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்திக் கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது. எனவே, சுகாதார கேடு ஏற்படும் வகையில், நடந்து கொள்ளும் இறைச்சி கடைக்காரர்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us