sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

/

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு


ADDED : ஆக 21, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 21, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரம் சாக்குப்பையில் வீசி சென்ற பெண் சிசு மீட்பு

பாலக்கோடு, ஆக. 21-

பாலக்கோடு அருகே, சாலையோரம் சாக்குப்பையில் வீசிசென்ற பெண் சிசு மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு பின், அரசின் தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கொம்மநாயக்கனஹள்ளி தேசிய நெடுஞ்சாலை தரைப்பாலம் பகுதியில், நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக, சென்றவர்கள் பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு, சாக்கு பையில் கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடம் சென்ற பாலக்கோடு போலீசார், சிசுவை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் சாந்தி, மருத்துவர்களிடம் சிசுவிற்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். சிசுவிற்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, தர்மபுரி அரசு மருத்துவமனையிலுள்ள, தொட்டில் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்டத்தில், கருவிலுள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால், கருக்கலைப்பு செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சம்மந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிறந்து சில மணி நேரமேயான பெண் சிசு சாலையோரம் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்கோடு போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us