/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம் ரூ.50 லட்சம் கடனால் தற்கொலை
/
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம் ரூ.50 லட்சம் கடனால் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம் ரூ.50 லட்சம் கடனால் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம் ரூ.50 லட்சம் கடனால் தற்கொலை
ADDED : மே 23, 2024 02:27 AM
ஓசூர்:அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த ஜெயங்கொண்டம் அருகே குவாகம் பகுதியை சேர்ந்தவர் மணிவாசகன், 36. இவர் மனைவி அருணா, 30. இவர்களுக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிவாசகன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அலசநத்தம் தோட்டகிரி சாலையில், வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த, 19ல் சொந்த ஊருக்கு, குழந்தையுடன் அருணா சென்றார். வீட்டில் தனியாக இருந்த மணிவாசகனுக்கு அருணா போன் செய்தபோது, போனை எடுக்கவில்லை. அதனால், அருகில் வசிப்போர்களிடம் வீட்டிற்கு சென்று பார்க்க கூறினார். அவர்கள் சென்று பார்த்தபோது, மின் விசிறியில் துாக்கிட்டு மணிவாசகன் இறந்து கிடந்தார். ஹட்கோ போலீசார் விசாரித்தனர். அப்போது, மனைவி அருணா, பெற்றோர், சகோதரருக்கு மணிவாசகன் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில், 'ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்து விட்டேன். 50 லட்சம் ரூபாய் வரை மொபைல் ஆப்களில் கடன் வாங்கியுள்ளேன். அதை திரும்ப செலுத்த முடியாது, அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

