/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
/
தேன்கனிக்கோட்டைக்கு 11 யானைகள் விரட்டியடிப்பு
ADDED : டிச 12, 2024 07:37 AM
ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த, 11 யானைகள் நேற்று அதி-காலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக்-காட்டில் மொத்தம், 3 குழுவாக, 32 யானைகள் முகாமிட்டிருந்-தன. அவற்றை, 2 குழுக்களாக ஒன்றிணைத்த வனத்துறையினர், நேற்று முன்தினம் மாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி விரட்டினர். கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை, 11 யானைகள் ஒரு குழுவாகவும், 21 யானைகள் மற்றொரு குழு-வாகவும் கடந்து சென்றன. இதில், 11 யானைகள்
தேன்கனிக்-கோட்டை வனச்சரகம் பேவநத்தம் வனப்பகுதிக்கு நேற்று அதி-காலை, 4:00 மணிக்கு விரட்டப்பட்டன. ஆனால், 21 யானைகள் அடங்கிய மற்றொரு குழு, ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்-பட்ட ஒன்னகுறுக்கி கரடு வனப்பகுதியில் தஞ்சமடைந்தன. அவற்றை நேற்று மாலை வரை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன் பின் அவற்றை, தேன்கனிக்கோட்டை நோக்கி விரட்டும் பணியில் ஈடு-பட்டனர்.தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, ராயக்-கோட்டை, ஓசூர் வனச்சரகத்திற்கு யானைகள் திரும்பி, திரும்பி வருவதும், அவற்றை வனத்துறையினர் விரட்டுவதுமாக உள்-ளனர். யானைகளால் வனப்பகுதியை
ஒட்டிய கிராமங்களில், ராகி, தக்காளி, நெல், முட்டைகோஸ், சோளம் உள்ளிட்ட பயிர்கள் தொடர்ந்து சேதமாகி வருவதால், கர்நாடகா மாநில வனப்பகு-திக்கு, யானைகளை விரைந்து விரட்ட, விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.