ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் குழுவினர், கெலமங்கலம் பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் ஓட்-டல்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகள், பானிப்-பூரி, டீக்கடைகள், மளிகைக் கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, இறைச்சி கடை-களில் விற்பனைக்கு வைத்திருந்த, 12 கிலோ கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் வகைகள், 9 கிலோ காலாவதியான உணவு பொருட்கள், 12 லிட்டர் காலாவதியான குளிர் பானங்கள் பறி-முதல் செய்து, 15 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம், 15,000 ரூபாய் அபராதம் விதித்து எச்ச-ரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.