sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஒகேனக்கல் காவிரியாற்றில் 14,000 கன அடி நீர்வரத்து

/

ஒகேனக்கல் காவிரியாற்றில் 14,000 கன அடி நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரியாற்றில் 14,000 கன அடி நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரியாற்றில் 14,000 கன அடி நீர்வரத்து


ADDED : அக் 30, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியாற்றில் உபரி நீர் திறக்கப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்தது.

இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

சுற்றுலா பயணிகள் காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us