ADDED : நவ 01, 2025 12:52 AM
ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே, தொட்டதிம்மனஹள்ளியை சேர்ந்தவர் சாக்கப்பன், 55; விவசாயி. இவரது அண்ணன் செல்வம், 65, ஆகிய இருவருக்கும், நிலத்தகராறு உள்ளது.
கடந்த, 27ல், இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சாக்கப்பன், அவரது மனைவி ராணி, மகன் முனிராஜ் ஆகியோர் தாக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சாக்கப்பன் கொடுத்த புகார்படி, செல்வம், அவரது மனைவி ராஜி, 54, மகன்கள் ரமேஷ், 38, ராமதாஸ், 36, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்த ராயக்கோட்டை போலீசார், ரமேஷ், ராமதாஸ் என, இருவரை கைது செய்தனர். அதேபோல், செல்வம் கொடுத்த புகார்படி, சாக்கப்பன், அவரது மனைவி ராணி, மகன் முனிராஜ், மருமகள் சுமித்ரா, 21, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

