sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்

/

கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்

கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்

கிடா வெட்டு பூஜையின் போது தேனீக்கள் கொட்டி 20 பேர் காயம்


ADDED : நவ 03, 2025 03:03 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, சின்னாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

இதையடுத்து, வேம்பள்ளி, ஒண்டியூர், கூட்டூர், போகிபுரம், தாசம்பட்டி ஆகிய, 5 கிராம மக்கள் சார்பில், நேற்று அணையின், உபரி நீர் வெளியேறும் பகுதியில், கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக மக்கள், தங்களது கிராமங்களிலிருந்து மேள, தாளங்கள் முழங்க மாவிளக்கை சுமந்தபடி ஊர்வலமாக அணைக்கு வந்தனர். அப்போது, அணை அருகே இருந்த மரத்தில் இருந்த மலை தேனீக்கள் கலைந்து, மக்களை விரட்டியது. தேனீக்கள் கொட்டியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 20 பேர் காயமடைந்து, சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். அணையில் தெப்பம் விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us