/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி
/
ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி
ADDED : நவ 03, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து பஞ்சப்-பள்ளி செல்லும் சாலை, 6 கி.மீ., துாரத்திற்கு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிர் திசையில் வாகனம் வரும்போது,
வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட வேண்டி உள்ளது. இதனால், சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று முதல்வரின் கிராம புற சாலைகள் மேம்பாட்டு திட்-டத்தில், 8.80 கோடி ரூபாய் மதிப்பில், 6 கி.மீ., துார தார்ச்சா-லையை விரிவாக்கம் செய்யும் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், சாலை ஒப்பந்ததாரரிடம், பணியை தரமாகவும், விரை-வாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

