sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்

/

மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்

மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்

மின்பணியாளர் பிரிவில் பயிற்சி 23 தொழிலாளர்களுக்கு சான்றிதழ்


ADDED : அக் 08, 2025 01:30 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்று, மின் பணியாளர் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற, 23 தொழிலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பயிற்சி சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் பணியாளர் பிரிவில், ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த, 22 முதல், 28 வரை, 7 நாட்கள், 23 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கான பயிற்சி சான்றிதழ்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாவட்டத்தில் 1,700 தொழிலாளர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

7 நாட்கள் நடக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு, கூலி இழப்பீட்டு தொகை நாள் ஒன்றுக்கு, 800 ரூபாய் வீதம், 7 நாட்களுக்கு, 5,600 ரூபாய் மற்றும் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு) மாதேஷ்வரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us