sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண், கல் கடத்த முயன்ற 3 லாரி, டிராக்டர் பறிமுதல்

/

மண், கல் கடத்த முயன்ற 3 லாரி, டிராக்டர் பறிமுதல்

மண், கல் கடத்த முயன்ற 3 லாரி, டிராக்டர் பறிமுதல்

மண், கல் கடத்த முயன்ற 3 லாரி, டிராக்டர் பறிமுதல்


ADDED : ஜூன் 12, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், ஓசூர், ஜூஜூவாடி வி.ஏ.ஓ., பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறையினர், ஜூஜூவாடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 12 யூனிட் மண்ணை, கர்நாடகாவிற்கு கடத்தியது தெரிந்தது.

அதேபோல், ஓசூர் சாலையிலுள்ள ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே, வி.ஏ.ஓ., ஜெகதீஷ் மற்றும் குழுவினர் நடத்திய வாகன சோதனையில், 1.6 யூனிட் எம்.சாண்ட் கடத்திய மினி டிப்பர் லாரி பறிமுதல் செய்தனர்.

* ஜெகதேவிபாளையம் வி.ஏ.ஓ., தீபா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம், திருவண்ணாமலை சாலை, ஜிட்டோபனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கல் கடத்த முயன்றது தெரிந்தது. பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

அதேபோல வேலம்பட்டி அருகே காணான்குட்டை ஏரி அருகே நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. மாரிசெட்டிஹள்ளி வி.ஏ.ஓ., வேடியம்மாள் புகார் படி நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us