/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை
/
இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை
ADDED : செப் 29, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே, யாசின் நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 50. வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த, 26ம் தேதி வீட்டில், 13 வயதான மகள் சுசிதாவுடன் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கொலையாளிகளை பிடிக்க, 7 தனிப்படைகளை அமைத்தனர். அவர்கள், எல்லம்மாளுக்கு கடைசியாக மொபைல் போனில் பேசியவர்கள் மற்றும் டவரில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.