sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது

/

இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது

இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது

இருதரப்பினர் இடையே தகராறு மாணவன் உட்பட 4 பேர் கைது


ADDED : டிச 04, 2025 07:16 AM

Google News

ADDED : டிச 04, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி,தளி அடுத்த பீமசந்திரத்தை சேர்ந்தவர் ராமாரெட்டி, 72, விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாஸ்ரெட்டி, 53, என்பவருக்கும் சொத்து பிரச்னை உள்ளது. இது தொடர்பாக, ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

சீனிவாஸ்ரெட்டியின் உறவினரான சுமித்ரா, 55, என்பவர், பிரச்னைக்குரிய நிலத்தில் புதிய வீட்டை கட்டி வருகிறார். அது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த, 1ம் தேதி மதியம், 2:30 மணிக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாஸ்ரெட்டி தரப்பினர், ராமாரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசரெட்டி, 65, என்பவரையும் தாக்கியதாக, தளி போலீசில் ராமாரெட்டி மனைவி சுனந்தா, 65, புகார் செய்தார். அதன்படி, சீனிவாஸ்ரெட்டி, நரசிம்மரெட்டி, 38, சுமித்ரா, 55, மற்றும் கர்நாடகா மாநிலம், பெங்களூரு தனியார் கல்லுாரியில், எம்.பி.ஏ., 2ம் ஆண்டு படிக்கும், தளி அருகே நாகசந்திரத்தை சேர்ந்த குமார், 23, ஆகிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், சுமித்ரா, குமாரை ஜாமினில் விடுவித்தனர். அதேபோல், குமார் கொடுத்த புகார்படி, ராமாரெட்டி, சீனிவாசரெட்டி மீது, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us