sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு

/

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த 40 குரங்குகள் பிடிப்பு


ADDED : நவ 20, 2025 01:45 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் வாரத்தில் திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும், விவசாய குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க விவசாயிகள், பயனாளிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கலெக் டர் அலுவலக வளாகத்தில் நாளுக்கு, நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆவின் பாலகம் எதிரே நிறுத்தப்படும் டூவீலர்களில் உள்ள கவர்களை பிய்த்து போடுவதும், ஆவணங்களை எடுத்து வெளியில் வீசியும் சென்றன. இது குறித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 2 நாட்களாக கூண்டுகள் அமைத்து, அங்கு சுற்றிய, 40 குரங்களை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர், வேப்பனஹள்ளி அடுத்த கொங்கனப்பள்ளி காப்புக்காட்டில் குரங்களை பாதுகாப்புடன் கொண்டு சென்று விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us