/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
ADDED : செப் 01, 2025 02:04 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் குள்ளம்பட்டி பஞ்., தி.மு.க., கிளைச்செயலாளர் பெருமாளின் ஏற்பாட்டில், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருமால் தலைமையில், தி.மு.க.,வை சேர்ந்த சிந்துமதி, மங்கையர்க்கரசி, தமிழரசி, பரிமளா, மகாலட்சுமி, குமார், சம்பத், சபரிமலை உட்பட, 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு முனுசாமி எம்.எல்.ஏ., கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், பையூர் ரவி, இளைஞர் நலன் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் மாதையன் உள்பட
பலர் பங்கேற்றனர்.