ADDED : டிச 22, 2025 08:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி சாலை பகுதியில், த.வெ.க., சார்பில், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களை, கட்சியில் இணைக்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, த.வெ.க., உறுப்பினர் கார்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முரளி விஜய், இணை செயலாளர் தாமோதரன், பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, மக்கள் இணைப்பு விழாவில் புதிய உறுப்பினர்களை சேர்த்தனர்.
மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய, 500-க்கும் மேற்பட்டோர், த.வெ.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

