ADDED : டிச 02, 2024 02:40 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, வயதான தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மேக்கலக-வுண்டனுாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 90, விவசாயி; இவரது மனைவி ராமக்கா, 75; தம்பதிக்கு இரண்டு மகன், 5 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
தம்பதியர் மட்டும் தனியாக வாழ்ந்தனர். ஓராண்டாக உடல்நிலை பாதித்து வீட்டில் இருந்தனர். இதனால் மகன்கள் கவனித்து வந்-தனர். பெரிய மகன் சீனிவாசன், அவரது மனைவி வெங்கடலட்-சுமி, நேற்று முன்தினம் இரவு வழக்கமபோல், கஞ்சி வைத்து குடிக்க வைத்து, படுக்கையில் படுக்க வைத்து சென்றனர்.நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, இருவரும் படுக்-கையில் இறந்து கிடந்தனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி உயிரிழந்தது, அக்கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. இருவ-ரது உடலையும் உறவினர்கள் மேள, தாளத்துடன் கொண்டு சென்று, அடக்கம் செய்தனர்.