sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம்

/

ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம்

ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம்

ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானை கூட்டம்


ADDED : நவ 23, 2024 03:07 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, 20க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று ஏரியில் ஆனந்த குளியல் போட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், அஞ்செட்டி, உரிகம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்-ணகிரி வனச்சரக பகுதிகளில், 225க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் தவிர, 125க்கும் மேற்பட்ட யானைகள் கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து இடம் பெயர்ந்தவை. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளி-யேறும் யானைகள், ராகி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள, 60க்கும் மேற்பட்ட யானைகளில், 20க்கும் மேற்பட்டவை குட்டிகளுடன் தனியாக பிரிந்து, திம்மசந்திரம் ஏரியில் ஆனந்த குளியல் போட்-டன. நீண்ட நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றன. தேன்க-னிக்கோட்டை வனச்சரகத்தில் ஆலஹள்ளி, தாவரக்கரை, திம்ம-சந்திரம், நொகனுார், தின்னுார், மலசோனை, முள்பிளாட், சந்த-னப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில், பல்வேறு குழுக்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால், அவற்றை கர்நாடகா மாநிலத்-திற்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us