/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை
/
மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை
மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை
மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த சூலாயுதம், அம்மன் சிலை
ADDED : அக் 14, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பால-தொட்டனப்பள்ளி கிராமத்தில், நுாற்றாண்டு பழமையான பெரி-யம்மா கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் மரக்கன்று நட மக்கள் நேற்று குழி தோண்டினர்.
அப்போது உலோகத்தாலான, 2 அடி நீள சூலாயுதம் கிடைத்தது. மேலும் தோண்டியபோது, 2 அடி உயர உலோக அம்மன் சிலை கிடைத்தது. அவற்றை சுத்தம் செய்து, கோவிலில் வைத்து வழிபட்டனர். தகவலறிந்து சுற்று வட்டார கிராம மக்களும் வந்து, அம்மன் சிலையை வழிபட்டு சென்றனர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வருவாய் துறை-யினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.