sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் நடந்து சென்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி

/

சாலையில் நடந்து சென்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி

சாலையில் நடந்து சென்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி

சாலையில் நடந்து சென்றபோது யானை தூக்கி வீசியதில் பெண் பலி


ADDED : ஜன 18, 2024 02:09 PM

Google News

ADDED : ஜன 18, 2024 02:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : உத்தனப்பள்ளி அருகே, சாலையில் நடந்து சென்ற பெண்ணை, அப்பகுதியில் சுற்றத்திரிந்த யானை துாக்கி வீதியதில் பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் மம்தா, 33; கெலமங்கலத்திலுள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை, 6:30 மணியளவில் அனுமந்தபுரம் அருகே கெலமங்கலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிலிருந்த, 4 யானைகள், ஒரு குட்டி யானை என மொத்தம் 5 யானைகள், கெலமங்கலம் - உத்தனப்பள்ளி சாலையை கடக்க முயன்றன. அப்போது சாலையில் சென்ற மம்தாவை, ஒரு யானை துாக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின்படி அங்கு கூடிய பொதுமக்கள், யானை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தும் வனத்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டதாக குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், டி.எஸ்.பி.,க்கள் தேன்கனிக்கோட்டை முரளி, ஓசூர் பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. வனச்சரகர்கள் ராயக்கோட்டை வெங்கடாசலம், ஓசூர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.இறந்த மம்தாவின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல்கட்டமாக, 50,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவரது குடும்பத்திற்கு, 9.50 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுப்பதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us