/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : அக் 03, 2025 01:33 AM
கிருஷ்ணகிரி காந்தி ஜெயந்தியன்று, தொழிலாளர்ளுக்கு விடுமுறை அளிக்காத, 51 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின்படி, தேசிய விடுமுறை தினத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதிக்க வேண்டும்.
அதன்படி, காந்தி ஜெயந்தியான நேற்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகர் தலைமையில், 32 கடைகள், 26 உணவு நிறுவனங்கள், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 67 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 24 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 51 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.