/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
/
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
ADDED : அக் 24, 2024 03:29 AM
சேலம்: தீபாவளியை முன்னிட்டு சேலம் வழியே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை சென்ட்ரல் - போத்தனுார் சிறப்பு ரயில், வரும், 29, நவ., 2 இரவு, 7:00 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே மறுநாள் அதிகாலை, 3:15க்கு போத்தனுாரை அடையும். சேலத்துக்கு நள்ளிரவு, 12:02க்கு வந்து செல்லும்.
கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்., 31, நவ., 4 நள்ளிரவு, 12:15க்கு கிளம்பி அன்று காலை, 9:30 மணிக்கு சென்னையை அடையும். சேலத்துக்கு அதிகாலை, 2:42க்கு வந்து செல்லும்.அதேபோல் மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அக்., 29 இரவு, 7:30க்கு புறப்பட்டு போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பூர் வழியே அடுத்தநாள் காலை, 10:45க்கு எழும்பூரை அடையும். சேலத்துக்கு அதிகாலை, 4:57க்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், அக்., 30 மதியம், 12:30க்கு கிளம்பி அடுத்தநாள் அதிகாலை, 5:15க்கு மங்களூருவை அடையும். சேலத்துக்கு மாலை, 5:37க்கு வந்து செல்லும். யஷ்வந்த்பூர் - கோட்டயம் சிறப்பு ரயில் அக்., 29 மாலை, 6:30க்கு கிளம்பி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே அடுத்தநாள் காலை, 8:10க்கு கோட்டயத்தை அடையும். சேலத்துக்கு இரவு, 11:55க்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில் அக்., 30 காலை, 11:10க்கு புறப்பட்டு அன்று நள்ளிரவு, 1:15க்கு யஷ்வந்த்பூரை அடையும். சேலத்துக்கு இரவு, 7:30க்கு வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.