sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநகராட்சி இடத்தில் மசூதி கட்ட முயற்சி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

/

மாநகராட்சி இடத்தில் மசூதி கட்ட முயற்சி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

மாநகராட்சி இடத்தில் மசூதி கட்ட முயற்சி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு

மாநகராட்சி இடத்தில் மசூதி கட்ட முயற்சி பா.ஜ.,வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு


ADDED : ஜூலை 29, 2025 02:04 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,சேலம் மாநகராட்சி இடத்தில், மசூதி கட்டப்படுவதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், குகை பெரியார் வளைவு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை இஸ்லாமியர் மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதி

யில் வீடு மற்றும் மசூதி கட்ட கட்டுமான பணிகளை, சில மாதங்களுக்கு முன் தொடங்கினர். அப்போது பா.ஜ.,வினர் மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டுமான பணிகளை நிறுத்தியது.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் இஸ்லாமியர்கள் கட்டுமான பணிகளை தொடர்வதாக வந்த தகவலையடுத்து, பா.ஜ.,வினர் நேற்று மதியம் அங்கு திரண்டனர். இதையடுத்து இஸ்லாமியரும் அங்கு குவிந்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இரு தரப்பினரிடமும் மாநகராட்சி அதிகாரிகள், செவ்வாய்ப்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிதாக கட்டடம் கட்டக் கூடாது என, பா.ஜ., நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உதவி கமிஷனர் ஹரிசங்கரி உள்ளிட்ட போலீசார் நீண்ட நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில், மாநகராட்சி அதிகாரி

களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, பணிகளை தொடரலாம் என தெரிவித்தனர். பின்னர், கட்டுமான பணிகளை இஸ்லாமியர் நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us