/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்
/
வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்
வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்
வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியருக்கு முகாம்
ADDED : டிச 13, 2024 09:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளதால் மதிப்பெண் சான்றி-தழ்களை இழந்தவர்கள், சிறப்பு முகாம்களில் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சரயு வெளி-யிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மழை வெள்-ளத்தால் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவியர் இம்மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில், மதிப்பெண் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., அலுவ-லகம், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்-குனர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்-கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

