sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு

/

கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு

கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு

கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லுாரியில் தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கு


ADDED : டிச 24, 2025 07:57 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், வேலை-வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தொழில்-நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பேசு-கையில், ''கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்பெற, தொழில்-நெறி வழிகாட்டும் கருத்தரங்கு நடக்கிறது.

இதில், யு.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., - ஐ.பி.பி.எஸ்., உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில், பயிற்சி பெற்றவர்-களில் பலர், அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியர் இதை பயன்படுத்தி பல்வேறு போட்டி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பல்-வேறு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள், வரைப்படங்க-ளுடன் கூடிய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அமைத்துள்-ளதை பார்வையிட்டார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவு-ரிசங்கர், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி முதல்வர் அனுராதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us