/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு
ADDED : டிச 08, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே போகனப்பள்ளியில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., காணிக்கைசாமி புகார் படி, விழாவை முன்நின்று
நடத்திய, போகனப்பள்-ளியை சேர்ந்த பழனி, 48, உட்பட மொத்தம், 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கிருஷ்ணகிரி அடுத்த பாரூர் அருகே பண்-ணந்துார் கிராமத்தில் உள்ள, கல்லுக்கடை பிரிவு சாலையில், நேற்று முன்தினம் உரிய அனுமதி-யின்றி எருது விடும் விழா நடந்தது. பண்ணந்துார் வி.ஏ.ஓ., கண்ணதாசன் புகார் படி, சதீஷ்சேகர், 40, உட்பட, 5 பேர் மீது, பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

