/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு
/
'மா' மரங்கள் சேதம் 4 பேர் மீது வழக்கு
ADDED : நவ 21, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த குட்டப்பட்டியை சேர்ந்தவர் காதர் பாஷா, 46, விவசாயி. அதேபகுதியை சேர்ந்தவர் மக்போல், 70. உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்தது.
இந்நிலையில், கடந்த, 10ல், காதர்பாஷாவுக்கு சொந்தமான மாந்தோட்டத்தில் உள்ள, 12 'மா'மரங்களை மக்போல் தரப்பினர் சேதப்படுத்தினர். அதை தடுக்க முயன்ற காதர் பாஷாவிடமும் தகராறு செய்தனர். இதுகுறித்து அவர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், மக்போல், 70, அவரது மனைவி கரியாபேகம், 64, மகன்கள் அலாவுதீன், 49, சதாம் உசேன், 40, ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

