ADDED : ஜூலை 10, 2026 04:38 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம்
அடுத்த வேடனுாரை சேர்ந்தவர் கண்ணம்மாள், 65. அதே பகுதியை சேர்ந்தவர்
பழனி, 65. உறவினர்களான இவர்களுக்குள், நிலப்பிரச்னை
இருந்துள்ளது. கடந்த, 24ல், நிலம் பிரிக்கும் போது தகராறு
ஏற்பட்டுள்ளது.
பழனி தாக்கியதில், கண்ணம்மாளுக்கு தலையில்
படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து நேற்று முன் தினம் அவர் அளித்த புகார் படி,
காவேரிப்பட்டணம் போலீசார், பழனி மீது வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.
