/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
/
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் மானியம் பெற அழைப்பு
ADDED : நவ 18, 2025 01:36 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய, 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய, 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு, 37,000 ரூபாய் வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு, 60,000 ரூபாய் வீதமும் இ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, 2026 பிப்., 28க்குள் கமிஷனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

