ADDED : நவ 30, 2024 02:08 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியத்தில், 56 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரயு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், ஜெகதேவி, பெருகோபனப்பள்ளி, ஐகுந்தம்கொத்தப்பள்ளி, சந்தூர் ஆகிய பஞ்.,களில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், 56.80 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும், வளர்ச்சி திட்ட பணி-களை மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,க்கள் முருகன், துரைசாமி, ஒன்றிய பொறியாளர்கள் பூம்பாவை, முரு-கேசன், அருண்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
