/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கலெக்டர் அலுவலகம் முன் சமைத்து, சாப்பிட்டு போராட்டம்
/
கலெக்டர் அலுவலகம் முன் சமைத்து, சாப்பிட்டு போராட்டம்
கலெக்டர் அலுவலகம் முன் சமைத்து, சாப்பிட்டு போராட்டம்
கலெக்டர் அலுவலகம் முன் சமைத்து, சாப்பிட்டு போராட்டம்
ADDED : மார் 06, 2024 02:37 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த, 7 நாட்களாக வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்
வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட
தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
இதில், துணை தாசில்தார் பட்டியல்
திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டதாரி அல்லாத
அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட
வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் நிறைவேற, தொடர்
வேலைநிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட
செயலாளர் ஜெய்சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் உள்பட
பலர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள், கலெக்டர்
அலுவலகத்தின் முன்பு சமைத்து, சாப்பிட்டு, அங்கேயே அமர்ந்து
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினர், 9வது நாளாக
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பணிகள்
முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

