/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புழுதியூர் வாரச்சந்தையில்ரூ.35 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
/
புழுதியூர் வாரச்சந்தையில்ரூ.35 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
புழுதியூர் வாரச்சந்தையில்ரூ.35 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
புழுதியூர் வாரச்சந்தையில்ரூ.35 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
ADDED : ஏப் 17, 2025 01:31 AM
அரூர்:அரூர் அடுத்த புழுதியூர் சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 170 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 48,000 முதல், 65,000 ரூபாய் வரை விற்பனையானது.
அதே போல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 8,000 முதல், 34,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையில், 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 8,700 முதல், 9,400 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 500 முதல், 700 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு
விற்பனையானது.