ADDED : அக் 23, 2025 01:16 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்தை
ஒட்டிய கிராமங்களுக்கு இரவில் படையெடுக்கும் யானைகள் கூட்டம்,
விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ராகி, தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனத்திலிருந்து வெளியேறிய, 5க்கும் மேற்பட்ட யானைகள், சந்தனப்பள்ளி அருகே உள்ள சாப்பரானப்பள்ளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தன. அங்குள்ள விவசாயி லட்சுமணன் என்பவரது தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த முட்டைகோஸ் மற்றும் பாசன குழாய்களை சேதப்படுத்தின.
மேலும், மாதேஷ் என்பவரது, 2 ஏக்கர் முட்டைகோஸ் மற்றும் ஒன்றரை ஏக்கர் ராகி தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் சேதமாகி இருப்பதை பார்த்தி அதிர்ச்சியடைந்தனர்.