sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா

/

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா


ADDED : பிப் 10, 2025 01:32 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளியில், ஆண்டுதோறும் தை மாதம் தேவாதியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில், பல்வேறு கிராமங்களில் வசிக்கும், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு தேவாதியம்மன் திருவிழா படப்பள்ளியில் நடந்தது. தோட்டத்திலுள்ள ஆவார செடியின் கீழே சிறப்பு பூஜை செய்து, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில், படப்பள்ளி மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் திரளாக கலந்து கொண்டு, குடும்ப நலம், ஊர் நலம், தொழில் மேம்பாடு, மழைவளம், அமைதி ஆகியவற்றை வேண்டி சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து, 24 ஆடுகள் பலியிட்டு தேவாதியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் மொத்தமாக பலியிடப்பட்ட ஆடுகளின் கறி வெட்டப்பட்டு, குடும்பங்களுக்கு பங்கிட்டு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழு ஊர் செட்டியார் குப்புசாமி, சங்கோதி செட்டியார், ராஜரத்தினம், மனேகரா செட்டியார், வெங்கடேசன், பூசாரி மனோகரன் மற்றும் விழாக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us